'பேய் படம்',' திகில் படம் ' என்று முத்திரை குத்தப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். என்னால் இதனை இந்த வரையரைக்குள் பார்த்து திருப்தி அடைய முடியவில்லை. எனது கண்ணோட்டத்தை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன். என் மனதில் பதிந்த பல விஷயங்கள் இப்படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் ஆனந்திக்கிறேன்...
1. ஈரமில்லா மனிதர்கள்
தனக்கென்று ஒரு பிரச்சனை வருகையில் எப்படி மனிதர்கள் மனதில் ஈரமில்லாமல் மாறிவிடுகிறார்கள் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கியிருந்தார் இயக்குனர். கலியுகத்தின் மக்களைப்பற்றி புராணங்களில் தீய குணங்கள் மேலோங்கி இருக்குமெனக் கூறி இருப்பார்கள். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புப் பெண்ணும், பெரியவரும், அடுதவர் குடும்பத்தைக் கெடுக்கிறோமே என்ற குற்ற உணர்வில்லாத காவலாளி, நண்பர், விடலைப்பெண் என்று அனைத்துக் கதாபாதிரங்களுமே இன்றைய வாழ்வில் நாம் காணும் அத்தகைய மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றனர்.நமது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. ஆனால் அப்பிரச்சினைகளில் மற்ற மனிதர்களின் பங்கு இப்படத்தில் தோன்றுபவர்களைப் போன்றே இருக்கின்றது.
2. வாழ்க்கைத்துணையின் மீதான சந்தேகம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsWKZFq59PqiAAvR34UmQiDZUJig2DErTJw1VhafWs2YsOChlHsvDCT8hraYz4G8SzmRBOZ24a5JwPaBcRJjJLdgpWSePNFyFMBGznE3TVMMp3GOY8sP9A1U-uj866CtxQAmuryGd25Q/s320/santhegam.jpg)
இயக்குனர் இந்தப் படத்தில் கூற வந்த கருத்து... கணவர்களின் சந்தேகம் பற்றியது. ஒரு பெண் அறிவு முதிர்ச்சி அடையாத, மனம் தடுமாறும் இளம் பருவத்தில் காதல் வயப்பட்டிருக்கலாம் அல்லது முதிர்ச்சியுடன் கூடிய காதலாக இருந்ததாலேயே பல வேறு முக்கிய காரணங்களுக்காக அந்தக் காதலைத் துறந்திருக்கலாம். ஒரு காலத்தில் ஒருவனைக் காதலித்ததால் மட்டுமே அவள் தவறான பெண்ணாக முடியாது. நல்ல காதலிகள் மிகவும் குறைவு தான் ! ஏனெனில், நல்ல மகள்களும், நல்ல மனைவிகளும், நல்ல தாய்மார்களும் உருவாக பல கெட்ட காதலிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு கெட்ட காதலி உங்களுக்குச் சிறந்த மனைவியாக விளங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை உங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வைத்துத் தீர்மானியுங்கள். மற்ற உறவுகள் அல்லது நண்பர்களின் வார்த்தைகளை வைத்து அல்ல என்பதை இயக்குனர் ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறார்.
3. கதாநாயகி
ரம்யா, இந்தக் கதையின் நாயகி. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவள். அன்புக்குக் கட்டுப்பட்டவள். அதனாலேயே தந்தைக்குக் கட்டுப்பட்டவள். சுருக்கமாக மிகவும் நல்லவள்.
பிறர் தன்னை ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிடக்கூடாது என்ற நன்னடத்தை கொண்டவள்.கோபத்தில் தன்னைக் காதலன் தவறாக ஒரு வார்த்தை பேசியதால் அந்த ஒன்றுக்காகவே காதலை விடுத்தவள். ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால்: A soft girl with a very strong positive character. இதனாலேயே இந்தப் பாத்திரப் படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது . நம்மைச் சுற்றி பல நல்ல பெண்கள் இருந்தாலும் ரம்யாவின் அளவு உறுதியும், தெளிவும் உள்ளதா என்பது என்னை யோசிக்க வைத்த விஷயம். தான் தவறானவள் அல்ல என்பதை நிரூபித்த விதம் சினிமாத்தனமாக இருந்தாலும் அவளது குணத்தை ஒட்டியே அமைந்ததால் படத்திற்கு அதுவே மதிப்பைக் கூட்டுகிறது.
4. கதாநாயகன்
வாசு எனும் போலீஸ் அதிகாரி வாசுதேவன். இந்தக் கதையின் முக்கியமான தூண். இப்படத்தின் பிரதானமான கதாபாத்திரம். காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழும் துடிப்பான இளைஞன்.அமைதியும், அழகும், குணமும் ஒரு சேர அமைந்த ரம்யாவை விரும்பிக்காதலிப்பவன்.
( ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால்: Someone who not only just loves Ramya, but admires her for her character).கோபத்தில் தன்னை விட்டுப் பிரிந்தாலும் , அவள் கோபத்திலுள்ள நியாயத்தை மதிப்பவன். பிணமாக அவளைக் கண்டபின்னும், அவள் தன முன்னாள் காதலி என்பது தெரிந்தால் அவளுக்கு அவப்பெயர் வரக்கூடும் என்று அவளைத் தெரியாது என்று கூறுவதும், பின்னர் அவளது மரணம் கொலை அல்ல என்று ஊர்ஜிதம் செய்யாமல் போனால், அது அவளுக்கும், தன காதலுக்கும் செய்யும் துரோகம் என்று எண்ணி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும் அவன் ரம்யாவின் மீது கொண்ட ஆழமான அன்பிற்குச் சான்றுகள்.
எந்த அடிப்படையோ, ஆதாரங்களோ இன்றி, தான் ரம்யாவின் மீது கொண்ட நம்பிக்கையை மட்டுமே கொண்டு வழக்கை விசாரிப்பது அவன் மீதான மதிப்பை மேலும் கூட்டுவதாக அமைகிறது. மரணங்கள் தண்ணீரால் ஏற்படுகின்றன என்பதையும், மரணமடைவோர் ரம்யாவின் சாவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று முடிவெடுப்பதிலும் அறிவுக்கூர்மை உள்ளவனாக மிளிர்கிறான். தன்னை வெறுப்பவராக இருந்தாலும் ரம்யாவின் தந்தையின் சிகிச்சைக்கு உதவுவதும், ரம்யாவின் தங்கையைக் காக்க முனைவதிலும் மனிதாபிமானமுள்ள மனிதனாகக் காணப்படுகிறான். மொத்தத்தில் வெறும் சேட்டைகள் புரியும் சினிமாக் கதாநாயகர்கள்போலல்லாமல் உண்மையான, கதைக்கேற்ற எதார்த்த நாயகன் இந்த வாசுதேவன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk4FTtWiN2QitYAk9rkeULKNhMkbPaq-nTiFUN7MVaAvWDEWy2nAvvjT32alREVCk2wUkLRg4b-aQvscnv6il7F8lORPNit9zf24t6wLi4l-6R98_9I9_L0zRBKPpWJt7NYvWZS9KUtw/s320/vaasu.jpg)
5. திரைக்கதை
திகில் கதையாக இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் புதுமையானது. கோரம், மாயாஜாலமின்றி ஓர் யதார்த்தமான ஆவியைப் பார்க்க முடிந்தது. திரைக்கதை கூறப்பட்ட விதம் பாராட்டப் படவேண்டியது.
இன்றைய நாளில், வாசு ஏற்கனவே அறிமுகமான ரம்யாவை( ரம்யாவின் பிணத்தைப்) பார்த்து 'தெரியாது' என்று கூறுவது போல் ஒரு காட்சி. தொடரும் பழைய நினைவுகளில், ஏற்கனவே தெரியாத ரம்யாவைத் ' தெரியும் ' என்று கூறி ஒரு இக்கட்டில் இருந்து அவளைக் காப்பாற்ற, அதன் மூலமே அவர்கள் நட்பு தோன்றுவது போன்ற காட்சி. இது போலவே ஐஸ்கிரீம் பார்லர், சாப்பாடு, திருச்சியின் தில்லை நகர் என்று இந்நாளின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வாசுவின் பழைய நினைவுகளைக் கூறுவதும் நல்ல திரைக்கதை அமைப்பு.
சிவப்பு, தண்ணீர் இவற்றை வாசு பார்க்க நேரிட்டால் ஆவியால் மரணம் நிகழும் திரைக்கதையில், படம் முடிவடையும் நேரத்தில் சிவப்புக் குடையும், அதிலிருந்து சொட்டும் மழைத்துளிகளும் ஆவியின் அடுத்த பலியைக் குறிப்பால் மட்டுமே உணர்த்தி முடித்துவிடுகிறார் இயக்குனர்.
ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு வந்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு !
1. ஈரமில்லா மனிதர்கள்
தனக்கென்று ஒரு பிரச்சனை வருகையில் எப்படி மனிதர்கள் மனதில் ஈரமில்லாமல் மாறிவிடுகிறார்கள் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கியிருந்தார் இயக்குனர். கலியுகத்தின் மக்களைப்பற்றி புராணங்களில் தீய குணங்கள் மேலோங்கி இருக்குமெனக் கூறி இருப்பார்கள். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புப் பெண்ணும், பெரியவரும், அடுதவர் குடும்பத்தைக் கெடுக்கிறோமே என்ற குற்ற உணர்வில்லாத காவலாளி, நண்பர், விடலைப்பெண் என்று அனைத்துக் கதாபாதிரங்களுமே இன்றைய வாழ்வில் நாம் காணும் அத்தகைய மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றனர்.நமது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. ஆனால் அப்பிரச்சினைகளில் மற்ற மனிதர்களின் பங்கு இப்படத்தில் தோன்றுபவர்களைப் போன்றே இருக்கின்றது.
2. வாழ்க்கைத்துணையின் மீதான சந்தேகம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsWKZFq59PqiAAvR34UmQiDZUJig2DErTJw1VhafWs2YsOChlHsvDCT8hraYz4G8SzmRBOZ24a5JwPaBcRJjJLdgpWSePNFyFMBGznE3TVMMp3GOY8sP9A1U-uj866CtxQAmuryGd25Q/s320/santhegam.jpg)
இயக்குனர் இந்தப் படத்தில் கூற வந்த கருத்து... கணவர்களின் சந்தேகம் பற்றியது. ஒரு பெண் அறிவு முதிர்ச்சி அடையாத, மனம் தடுமாறும் இளம் பருவத்தில் காதல் வயப்பட்டிருக்கலாம் அல்லது முதிர்ச்சியுடன் கூடிய காதலாக இருந்ததாலேயே பல வேறு முக்கிய காரணங்களுக்காக அந்தக் காதலைத் துறந்திருக்கலாம். ஒரு காலத்தில் ஒருவனைக் காதலித்ததால் மட்டுமே அவள் தவறான பெண்ணாக முடியாது. நல்ல காதலிகள் மிகவும் குறைவு தான் ! ஏனெனில், நல்ல மகள்களும், நல்ல மனைவிகளும், நல்ல தாய்மார்களும் உருவாக பல கெட்ட காதலிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு கெட்ட காதலி உங்களுக்குச் சிறந்த மனைவியாக விளங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை உங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வைத்துத் தீர்மானியுங்கள். மற்ற உறவுகள் அல்லது நண்பர்களின் வார்த்தைகளை வைத்து அல்ல என்பதை இயக்குனர் ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறார்.
3. கதாநாயகி
ரம்யா, இந்தக் கதையின் நாயகி. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவள். அன்புக்குக் கட்டுப்பட்டவள். அதனாலேயே தந்தைக்குக் கட்டுப்பட்டவள். சுருக்கமாக மிகவும் நல்லவள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRfOZekR03lnvBf68UB45xIwlsYwZ-yYZ21xWChPGF-Q1P95HsGn6TZMugTaGqhSvKJxLURrmeG6IVn9JTPRXf-9qYHdq1lQZxyTKVLMJhWXbQUprRydbW3R4w_GnRksW6ut_NXr-QCw/s320/ramya.jpg)
4. கதாநாயகன்
வாசு எனும் போலீஸ் அதிகாரி வாசுதேவன். இந்தக் கதையின் முக்கியமான தூண். இப்படத்தின் பிரதானமான கதாபாத்திரம். காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழும் துடிப்பான இளைஞன்.அமைதியும், அழகும், குணமும் ஒரு சேர அமைந்த ரம்யாவை விரும்பிக்காதலிப்பவன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiboPtqjprWDZiIY7XbEBmdd9YudHj4n5yRZLDja9UAC9AArr_zizjsYbp3A8G6A97RpcmhNTMQ9iKiKs9Z8O_kw4YkXSyOBDS45mWWTgctjZHz1r_A2-feC0Z2wF8OsNUsAlFyf2RMnA/s320/vasuramya.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNoolx4DeNCPWDGd1-cBlh0lE-U4F_TOiYLGoloc6NLB5HVjsfHRc4Tbd5qXBlCo7YZD0VFCFtCBJT-L8_q2XRIQSyYLXWuLjmMurrX56gGGcFsI2vcfv3W3Hfes1tAAECsRbtTdmTZQ/s320/vasuramya1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk4FTtWiN2QitYAk9rkeULKNhMkbPaq-nTiFUN7MVaAvWDEWy2nAvvjT32alREVCk2wUkLRg4b-aQvscnv6il7F8lORPNit9zf24t6wLi4l-6R98_9I9_L0zRBKPpWJt7NYvWZS9KUtw/s320/vaasu.jpg)
5. திரைக்கதை
திகில் கதையாக இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் புதுமையானது. கோரம், மாயாஜாலமின்றி ஓர் யதார்த்தமான ஆவியைப் பார்க்க முடிந்தது. திரைக்கதை கூறப்பட்ட விதம் பாராட்டப் படவேண்டியது.
இன்றைய நாளில், வாசு ஏற்கனவே அறிமுகமான ரம்யாவை( ரம்யாவின் பிணத்தைப்) பார்த்து 'தெரியாது' என்று கூறுவது போல் ஒரு காட்சி. தொடரும் பழைய நினைவுகளில், ஏற்கனவே தெரியாத ரம்யாவைத் ' தெரியும் ' என்று கூறி ஒரு இக்கட்டில் இருந்து அவளைக் காப்பாற்ற, அதன் மூலமே அவர்கள் நட்பு தோன்றுவது போன்ற காட்சி. இது போலவே ஐஸ்கிரீம் பார்லர், சாப்பாடு, திருச்சியின் தில்லை நகர் என்று இந்நாளின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வாசுவின் பழைய நினைவுகளைக் கூறுவதும் நல்ல திரைக்கதை அமைப்பு.
சிவப்பு, தண்ணீர் இவற்றை வாசு பார்க்க நேரிட்டால் ஆவியால் மரணம் நிகழும் திரைக்கதையில், படம் முடிவடையும் நேரத்தில் சிவப்புக் குடையும், அதிலிருந்து சொட்டும் மழைத்துளிகளும் ஆவியின் அடுத்த பலியைக் குறிப்பால் மட்டுமே உணர்த்தி முடித்துவிடுகிறார் இயக்குனர்.
ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு வந்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு !