Monday, March 29, 2010

வெற்றியின் ரகசியம்







எனது முந்தைய பதிவான "இன்றைய  தேர்வுகள்" படித்த பின்பு இந்தப பதிவைப் படிக்கவும்.


அதில் பயிற்சி வகுப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம்( coaching classes). ஒரு தேர்வில் வெற்றி பெற முடியாது என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பின் மூலம் பயிற்றுவிக்கப்படுவார்கள். இது காட்டுவது என்னவென்றால் அவர் அந்தத் தகுதியை இயற்கையைப் பெறவில்லை, அவ்வாறு பெற்றவர்களுக்கு இந்தப் பயிற்சி  தேவைப்பட்டிராது !


இருக்கும் திறமைக்குப் பட்டை தீட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்... அந்தத் திறமை மேன்மை பெறுவதற்கு. ஆனால் தேர்வு பெறுவதே கடினம் என்பவருக்கு பயிற்சி கொடுத்து ஒரு பதவியைக்கொடுப்பதோ, அல்லது ஒரு படிப்புக்கான நுழைவை உறுதி செய்வதோ, பின்னர் அவருக்கே தாங்க முடியாத சுமையாகிவிடும்  !


முக்கியமாக பெற்றோரின் விருப்பத்திற்காக குழந்தைகளை எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள வற்புறுத்துதல் கூடாது. அது இசையோ, நடனமோ, எதிர்காலப் படிப்பினைப் பற்றிய முடிவோ , அந்தக் குழந்தையின் திறமைகள், எதில் அவர்களால் மனம் ஒன்றி ஈடுபட்டு வெற்றி பெற முடியும் போன்றவற்றைக் கண்டறிந்து அதில் அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அதில் கண்டிப்பாக அவர்கள் பெரும் பெயர் பெறுவார்கள், ஏனெனில் அது அவர்கள் விரும்பி செய்யும் ஒரு செயலாகவே இருப்பதால்....அவர்கள் மீது திணிக்கப் பட்ட வெறும் வற்புறுத்தலாக இல்லாததால்! எதற்காக இந்த வகுப்ப்புகுப் போகிறோம் என்றே தெரியாமல் காலையும், மாலையும் பல வகுப்புகளுக்குப் போகும் பல குழந்தைகளை என்னைச் சுற்றிப் பார்க்கிறேன் !






நான் கூறும் உண்மைகளை கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள்....


தனி மனிதர்கள் ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள். குடும்பங்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றன. எனவே, யார் நமக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர், யார் நமது கட்டடங்களை, பாலங்களை, அணைகளை  கட்டும் பொறியாளர், யார் நமது வாகனங்களை வடிவமைக்கப் போகிறார், யார் நமது உணவுப் பொருட்ட்களை விளைவிக்கப்போகிறார், என்பதை  எல்லாம் நாம் தான் தீர்மானிக்கிறோம் ! இவர் காரணம், அவர் காரணம் என்று கூறுவதை விடுத்துப் பாப்போம்.




மற்றவர் மீது அக்கறையும், உடலையும், மருந்துகளையும் ஆரியிந்து அறியும் ஆற்றல் பெற்ற ஒருவர் மருத்துவர் ஆகட்டும்.


கட்டிடங்கள் மற்றும் கட்டடக்கலை மீது ஆர்வம் கொண்டுள்ள ஒருவர் கட்டிடம் கட்டும் பொறியாளராகட்டும்   .


பகுத்தைவுத் திறனும், தீர்வுகளை விரைவாகக் காணும் திறனும் கொண்டவர் மென் பொருள்  கணினிப் பொறியாளர் ஆகட்டும்.


பயிர்களின் மீது ஆர்வம் கொண்டவர் விவசாயத்தைத் தொழிலை ஏற்கட்டும்.


எந்திரங்களின் மீது ஆர்வம் கொண்ட ஒருவர் எந்திரவியல் பொறியாளர் ஆகட்டும்.


நாம் லல்லு பிரசாத்தை விண்வெளி ஆராய்ச்சி ஆளராகவும் , நீல் ஆம்ச்டிராங்கை அரசியல்வாதியாகவும் நாம் வற்புறுத்தாமல் இருந்தோமேயானால், நமது சமுதாயம் அணித்துத் துறைகளிலும் சிறந்த வல்லுனர்கலப் பெற்று விளங்கும். எனது வாதம் தங்களுக்குப் புரியுமென்று நம்புகிறேன் !





  

ஒரு நல்ல மருத்துவர் முதல் சோதனையின் போதே நோயாளியைப் பற்றியும், அவரது நோயின் குணம் மற்றும் தீவிரம் அறிந்து , அந்த நோயாளியின் உடலுக்குக் கேடு விளைவிக்காமல்  நோயை  குணப்படுத்தும் மருந்தை அளிப்பார். விருப்பமின்றி மருத்துவராக வேண்டும் என்ற கட்டாயத்தினால் மருத்துவரான இன்னொருவரும் அதே நோய்க்கான  மருந்துகள் அளிப்பார், ஆனால் அது இந்த நோயாளியின் உடலுக்கு எந்த அளவிற்குப பொருந்தும் என்பதை ஆராயாமல் கொடுப்பார். இதனால் நோய் குணமானாலும், பக்க விளைவுகள் ஏற்படும். இதனால் அவர் நல்ல மருத்துவர் என்ற பெயரை எடுப்பது கடினம்.

இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.






அறிவாளியான ஒருவர் துறை "" வை விரும்பினாலும், அவரை துறை " " வில் நன்றாக பயிற்றுவிக்க முடியும், அதில் அவர் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் அந்தத் துறையை விரும்பி பணி புரிபவரை விட இவருக்கு அந்தத்துறையில் ஜெயிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதாவது நடிகர் 'விஜய்' ஓவியர் ' டா வின்சி' ஆவது போலவும், 'டெண்டுல்கர்' பின்னணிப் பாடகர் ஆவது போலவும் !




அதனால், நாம் நமது குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான துறையிலோ, கலையிலோ சாதிக்க வைப்போம்... அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாத விஷயத்தைப் புதியதாய் அவர்கள் மீது திணிப்பதை விட, அவர்களுக்குள் புதைந்து கிடைக்கும் திறமைகளைக்கண்டரிந்து பட்டை தீட்டுவோம் .

இது தான் அவர்களது எதிகால "வெற்றியின் ரகசியம் "!

1 comments:

சுசி said...

நல்ல பகிர்வு.

Post a Comment